சென்னை: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 5 ஆண்டுகளாக வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி கடன் வசூல் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பது சட்ட நடைமுறை ஆகும்.