புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், மகன்கள் அகிலேஷ், பிரதீக் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாத் சதுர்வேதி. இவர் கடந்த 2005ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், மகன் அகிலேஷ் யாதவ் அவரது மனைவி டிம்பிள் மற்றும் மற்றொரு மகனான பிரதீக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் முறைகேடாக சொத்துக்களை குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. கடந்த 2012ம் ஆண்டு சிபிஐ விசாரணையை எதிர்த்து சமாஜ்வாடி தலைவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.