கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக விழா நேற்று இரவு நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 18 பேரை அறிவித்தார். இடைத்தேர்தலில், பொன்மலையில் பூவை ஜெகதீசன், பெரம்பூரில் பிரியதர்சினி, திருப்போரூரில் இந்திய குடியரசு கட்சியின் கருணாகரன், சோளிங்கரில் இந்திய குடியரசு கட்சியின் மலைராஜன், குடியாத்தம் ெதாகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வெங்கடேசன், ஆம்பூரில் நந்தகோபால், ஒசூரில் ஜெயபால், பாப்பிரெட்டிபட்டியில் நல்லதம்பி, ஒசூரில் குப்புசாமி, நிலக்கோட்டையில் சின்னதுரை, திருவாரூரில் அருண் சிதம்பரம், தஞ்சாவூரில் வளரும் தமிழக கட்சி வேட்பாளர் துரையரசன், மானாமதுரையில் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டியில் வளரும் தமிழகம் கட்சி தங்கவேல், பெரியகுளத்தில் பிரபு, சாத்தூரில் சுந்தரராஜ், பரமக்குடியில் உக்கிரபாண்டியன், விளாத்திகுளத்தில் தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர் நடராஜ் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.