இந்த ஆண்டு மாற்றத்திற்கான ஆண்டாக அமையும். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ என்று வைகோ நம்பிக்கையோடு கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான வெற்றி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜனநாயகமா, பாசிசமா என்பதை தேர்தலில் மக்கள் நிச்சயமாக நிரூபிப்பார்கள். ஜனநாயகத்தை காக்க மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.