இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, துணை கண்டத்தில் ஜனநாயகம், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை அற்ற சூழலை நாம் நமது பிராந்தியத்தில் உருவாக்குவோம் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.