டெல்லி: இந்திய ராணுவத்திற்கு முதன்முறையாக அடுத்த வாரம் போபர்ஸ் பீரங்கிகளின் மாடலில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பீரங்கிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கடந்த 1989ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அரசால் ஸ்வீடன் நிறுவனத்திடம் ஆயிரத்து 437 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டவை போபர்ஸ் பீரங்கிகள் .இந்த பீரங்கி பேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு 66 கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் நீண்டகாலமாக போபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பான வழக்குகள் நடைபெற்றன. ஆயினும் போபர்ஸ் பீரங்கிகளின் தரத்தில் குறையில்லை என்பதால் ஸ்வீடன் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்படவில்லை. போபர்ஸ் பாணியிலான தொழில்நுட்ப முன் மாதிரியை வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கிகள் சோதனையின் போது தகுதியற்றவையாக கருதப்பட்டன.