சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஐ.டி ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* கொளத்தூர் சத்ய சாய் நகரை சேர்ந்த கலைச்செல்வி (53). நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 9 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.