மதுரை மக்களவை தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்பியும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான கோபாலகிருஷ்ணன், மீண்டும் சீட் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தார். இதற்காக தான் செய்த பணிகளை எல்லாம் பட்டியலிட்டு விளம்பரமும் செய்திருந்தார். ஓபிஎஸ்சிடமும் ‘பிட்’டை போட்டு வைத்திருந்தார். இவரது பெயரையும் கட்சித்தலைமை பரிசீலித்து உத்தேச பட்டியலில் வைத்திருந்தது. அறிவிப்பு வெளியாக வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில், கடைசி நிமிடத்தில் இவரது சீட் பறிபோனது. எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யனுக்கு சீட் வழங்கியது அதிமுக தலைமை. இதனால் மனமுடைந்த கோபாலகிருஷ்ணன் சென்னையிலேயே முகாமிட்டு, மதுரை வேட்பாளர் பெயரை மாற்றக்கோரி மன்றாடினாராம். அப்போது அவரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ சந்தித்து சமரசப்படுத்தியுள்ளனர்.