ஏசி வசதியுடன் திருச்சியில் தயாரிக்கப்பட்ட மலை ரயில் பெட்டி ஊட்டி அனுப்பப்பட்டது

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ரயில் இன்ஜின்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பல வருடங்களாக ஊட்டி மலை ரயிலுக்கு பொன்மலை பணிமனையில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. ஊட்டி மலை ரயிலுக்கு புதியதாக பெட்டி தயாரிக்க பொன்மலை பணிமனைக்கு ஆர்டர் வந்தது. இதையடுத்து குளிரூட்டப்பட்ட(ஏசி) ரயில்பெட்டி ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டி வர்ணம் தீட்டப்பட்டு அதில் யானை, சிறுத்தை, கரடி போன்ற மிருங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி நேற்று கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: