லக்கிம்பூர் : உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான லக்கிம்பூர் கேரி நேபாள எல்லையில் உள்ளது. இந்த லக்கிம்பூர் கேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக யோகேஷ் வர்மா பதவி வகிக்கிறார். நேற்று முதல் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக லக்கிம்பூர் கேரியில் உள்ள பாஜக அலுவலகத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது யோகேஷ் சர்மா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவருடைய காலில் குண்டு பாய்ந்தது.