திருச்சி : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன் திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கட்சியில் இணைந்தார். வி.பி.கலைராஜனை அமமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை அறிவித்திருந்தார். இந்நிலையில் அமமுகவின் தென் தென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தலைமை உள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதாலும், மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடியவர் என்பதாலும் திமுகவில் இணைந்தாக வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.