திமுகவில் இணைந்தார் வி.பி.கலைராஜன் : மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு!

திருச்சி : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன் திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கட்சியில் இணைந்தார். வி.பி.கலைராஜனை அமமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை அறிவித்திருந்தார். இந்நிலையில் அமமுகவின் தென் தென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தலைமை உள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதாலும், மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடியவர் என்பதாலும் திமுகவில் இணைந்தாக வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், இழந்த தமிழக உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகவே திமுகவில் இணைந்தேன் என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைவார்கள் என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், யாரையும் நான் சவாலாக கருதவில்லை என்றும் மத்தியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளை அகற்ற தங்களைவிட பொதுமக்கள் ஆவலுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: