தேர்வு அறைக்குள் மாத்திரை எடுத்துச் செல்ல அனுமதி கோரிய வழக்கு: ஈ.எஸ்.ஐ மருத்துவர் ஆஜராக உத்தரவு

மதுரை: சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேர்வு அறைக்குள் மாத்திரை, இன்சுலின், சாக்லேட், எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கில் ஈ.எஸ்.ஐ மருத்துவர் ஆஜராக உத்தரவு வழங்கப்பட்டது. கேசவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஈ.எஸ்.ஐ மருத்துவர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது. தேர்வு அறைக்குள் சர்க்கரை நோய்க்கு உதவும் பொருட்களை எடுத்து செல்ல 2017-ல் சிபிஎஸ்இ நிபந்தனைகளுடன் அறிக்கை வெளியிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: