புதுடெல்லி: வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் உண்டா? என்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கேசி.பழனிசாமிகோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். அதிமுக கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கேசி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,வேட்பாளர்கள் தரப்பில் பூர்த்தி செய்து தரப்படும் அதாவது ஏ மற்றும் பி விண்ணப்பத்தில் பொதுச்செயலாளர் மட்டும் தான் கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளது. அதனால் வேட்பாளர் படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.