தாம்பரம் பகுதியில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா 100 சதவீதம் அனைத்து பொதுமக்களும் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு, பூ ஆகியவற்றுடன் தேர்தல் அழைப்பிதழ் அடங்கிய தாம்பூல தட்டை வைத்து வருகின்ற மக்களவை தேர்தலில் 100 சதவீதம் அனைத்து பொதுமக்களும் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘’காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.