பிறந்து சில மணி நேரமே ஆனா பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அரசு மருத்துவமனை அருகே கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. கலவை பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் குழந்தை ஓன்று கிடப்பதாக மருத்துவமனைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற செவிலியர்கள் பிறந்து ஒரு சில மணி நேரமே ஆனா தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் குழந்தையை மீட்டனர்.

பின்னர் குழந்தையை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் இன்கியூபெட்டரில் வைத்துள்ளனர். எனவே குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் ஊட்டச்சத்து அளித்து உடல் வெப்பநிலையை சீராக்க வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், அந்த குழந்தை யாருடையது எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: