சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் உள்பட 3 பேர் கைது

பெரம்பூர்: கொருக்குப்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் உள்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை பாரதி நகரில் வசிக்கும் 12 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள  மாநகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சிறுமி அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் டியூசன் படிக்க  சென்றபோது சிறுமியிடம் டியூசன் ஆசிரியர் ஏன் தலை, ஆடைகள் கலைந்துள்ளது? என்று கேட்டதற்கு மூன்று நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கதறி அழுதுகொண்டு கூறியுள்ளார்.

தகவலறிந்து சிறுமியின் தாய் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் (70), பெயிண்டர் லட்சுமணன் (38), வளையல்  வியாபாரம் செய்யும் ராஜா (46) ஆகிய 3 பேரிடம் விசாரித்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 ேபரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: