லக்னோ: உபி.யில் மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் முறையே 37, 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ராஷ்டிரிய லோக் தளத்துக்கு 3 தொகுதிகள் என மொத்தம் 78 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளில் இந்த கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த கட்சிகளுக்காக காங்கிரஸ் 7 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ்பாபர் கூறுகையில், “மணிப்பூரி, கன்னுாஜ் மற்றும் பிரோசாபாத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது.