அதிமுக ஆட்சியில் இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தொடர் பாலியல் வன்முறை மனித சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. அரசியல் தொடர்பு இல்லாமல் 7 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட பெண்கள் மீது இத்தாக்குதல்கள் வெளியில் தெரியாமல் நடந்திருக்க முடியாது. இந்த குற்றத்தின் பின்னணியில் முக்கிய அரசு பொறுப்புகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் உள்ளனர். நீதிமன்றத்தின் நேரடிப் பொறுப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தனது ஆட்சியை நீட்டிக்க உதவியாக உள்ள யாரொருவரையும், அவர் என்ன குற்றம் செய்தாலும் பாதுகாக்க அதிமுக அரசு தயாராக இருப்பது அதன் கையாலாகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்கான தகுதியை அக்கட்சி இழந்து விட்டது. இதற்கான தண்டனையை அக்கட்சிக்கு தமிழக வாக்காளர்கள் வழங்குவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: