சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தொடர் பாலியல் வன்முறை மனித சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. அரசியல் தொடர்பு இல்லாமல் 7 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட பெண்கள் மீது இத்தாக்குதல்கள் வெளியில் தெரியாமல் நடந்திருக்க முடியாது. இந்த குற்றத்தின் பின்னணியில் முக்கிய அரசு பொறுப்புகளில் உள்ள அரசியல் பிரமுகர்கள் உள்ளனர். நீதிமன்றத்தின் நேரடிப் பொறுப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.