திருச்சி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி:  மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மகேந்திரன் அபர்ணா, கேசவன்,  செல்வேந்திரன் ஆகியோரின் உடமைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 733 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.22.43  லட்சம் ஆகும். இதுகுறித்து, 4 பேரிடமும் விசாரணை  நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: