புதுடெல்லி: அதிமுக என்ற கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரை முடக்கி வைக்க வேண்டும் என டிடிவி.தினகரனின் வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு பின், இரட்டைஇலை சின்னம், அதிமுக ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, டிடிவி.தினகரன் தரப்பில் கடந்த 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக்குதா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்.