மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த காட்டுராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமையன்பட்டி ஊராட்சி பகுதியில் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான 150 ஏக்கரில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மழைக்காலங்களில் குப்பை மேட்டிலிருந்து வரும் கழிவுநீர், அருவன்குளம் கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆறு அசுத்தம் அடைந்து வருகிறது. எனவே குப்பையை அகற்றவும், இனிமேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்தும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார்.