வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை தரமணி வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையின் தரமணி வேதியியல் தொழில்நுட்பப் பயிலகம் வெளியிட்ட அறிவிப்பு: 100% உத்தரவாதத்துடன் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பை தரக்கூடிய பட்டயப்படிப்பை இந்த பயிலகம் வழங்கி வருகிறது. இங்கு 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இயற்பியல், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், தகவல் நடைமுறைகள், பயோடெக்னாலஜி, டெக்னிக்கல் தொழில்பாடம், விவசாயம், இன்ஜினியரிங் கிராபிக்ஸ், வணிக ஆய்வுகள், தொழில் முனைவு பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருகிற 20ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பதாரர் டெபிட்கார்ட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பதிவுக்கட்டணம் செலுத்த அவசியமில்லை.

The post வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: