செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீட்டை வாங்கி தருவதாக பகீர் வாக்குறுதி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக மாங்குடி, பாஜ சார்பில் எச்.ராஜா உள்பட பலர் களத்தில் உள்ளனர். பாஜ சார்பில் நேற்று காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட காரைக்குடியில் சட்டக்கல்லூரி, கோட்டையூரில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அறிவிப்புகளை மீண்டும் அறிவித்துள்ளனர். அதேபோல், கடந்த 2019, ஆக. 30ம் தேதி செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்ட நிலையில் கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு பெற்று தருவதாக மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளனர். இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கை தயாரித்திருக்கிறார்களே என பொதுமக்களிடையே சிரிப்பலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் மறந்தும் எந்த இடத்திலும் பாஜ என்ற வார்த்தை வரவில்லை. ‘‘இலையில் மலர்ந்த தாமரை’’ என போட்டுள்ளனர். இது பாஜ தொண்டர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  …

The post செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீட்டை வாங்கி தருவதாக பகீர் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: