பென்னாகரம்: ஒகேனக்கல் பென்னாகரம் சாலையோரத்தில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. வறட்சி காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. பண்ணப்பட்டி பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக, யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால், ஒகேனக்கல் பென்னாகரம் சாலையோரங்களில் ஒற்றை யானை சுற்றித்திரிகிறது.