ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், பல விஷயங்களில் பா.ஜ தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, புது அவதாரமாக உருவெடுக்க முடியும் என நினைத்தார்கள். இதனால் தேர்தலுக்காவே, பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாம் பல கோடி மதிப்புள்ள விமானத்தை இழந்தோம். நல்ல வேளை பைலட் தப்பிவிட்டார். அவரை பாகிஸ்தான் மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிட்டது. பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். அவரோ, நானோ இல்லையென்றாலும், இந்தியா வாழும், முன்னேறும். இங்கு போரே ஏற்படாது. உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூத்த அதிகாரியை இந்த அரசு பயன்படுத்துகிறது.