திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் அடையாளம் தெரியாத கும்பலால் தம்பதி பாண்டி-பஞ்சவர்ணம் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை குறித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பாண்டி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.