சொகுசு கார்களில் போர்ஷே நிறுவனத்தின் மெகான் எஸ்யூவி ரக கார், உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக உள்ளது. தனித்துவமான டிசைன் அம்சங்கள் மற்றும் சிறப்பான திறன் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 86,000 போர்ஷே மெகான் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. சொகுசு கார் மார்க்கெட்டில் ஓர் சிறந்த தேர்வாகவும், போட்டியாளர்களுக்கு சவாலான மாடலாகவும் இந்த கார் உள்ளது. இச்சூழலில், அடுத்த தலைமுறை மெகான் காரை முழுவதும் மின்சார மாடலாக அறிமுகம் செய்ய போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்புதிய தலைமுறை போர்ஷே மெகான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த காரின் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இதுபற்றி போர்ஷே நிறுவன உயர் அதிகாரி ஒலிவர் புளூம் கூறுகையில், “மின்சார வாகன துறையுடன் போர்ஷே இணைந்து செயலாற்றி வருகிறது. வரும் 2022ம் ஆண்டில் 6 மில்லியன் யூரோக்களை, மின்சார வாகன உருவாக்கத்திற்காக முதலீடு செய்ய இருக்கிறோம்.