டெல்லி: காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின் ஆவார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டம், சதூரா அருகே உள்ள காஜிபோரா கிராமத்தில் இருந்து ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் நேற்று மாலை கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் விடுப்பில் இருப்பதாக தெரியவந்தது. அவர் கடத்தப்பட்டாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.