சென்னை: தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விபத்து ஏற்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடரும் விபத்தால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடர் விபத்துக்கள் என்பது வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கபாதையில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்தநிலையில், தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை நிலைய ஊழியர் ஒருவர் சுரங்கபாதை ரயில் நிலையத்தை துப்புரவு இயந்திரத்தை கொண்டு துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, தானியங்கி கதவுக்கு அருகில் சுத்தம் செய்ய இயந்திரத்தை வேகமாக இயக்கினார். இதில் எதிர்பாராத விதமாக துப்புரவு இயந்திரம் தானியங்கி கதவின் மேல் வேகமாக மோதியது.
இதில், தானியங்கி கண்ணாடி கதவு உடைந்த கண்ணாடி துகள்கள் தரையில் விழுந்தது. இதனால், அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.