புதுச்சேரி: அரவிந்தர் ஆசிரமம் குடியிருப்பு பகுதியில் லேப்டாப் மற்றும் 6 செல்போன் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் கிளியனூர் பகுதியை சேர்ந்த அருள் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் அவரிடம் இருந்து திருடபட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.