சிஎல்ஏடி தேர்விற்கான தீர்ப்பை நீட் தேர்விற்கு பொருந்தும் வகையில் எடுத்துக் கொண்டு, கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரும் மோசடி. கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில மாணவர்களுக்குத்தான் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கலாம் என்ற தகவல், தேர்வு எழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியாகும். எனவே முதல்வர் கூறியதைப் போல, நீட் தேர்வு விலக்கு ஒன்றே தமிழகத்தின் இலக்கு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய தேர்வு முகமை பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.