அரூர்: அரூர் அருகே மொரப்பூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள் பொக்லைன் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 சதவீத மரவள்ளி அறுவடை செய்யப்பட்டு விட்டது. அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள், அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், சேலம், மல்லூர், ஆத்தூர், ராசிபுரம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியால், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.