புதுடெல்லி: மனைவியை கைவிட்டு தலைமறைவாகிய 45 வெளிநாட்டுவாழ் இந்தியர்களின்(என்ஆர்ஐ) பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தங்களுடைய மனைவியை சட்டவிரோதமாக கைவிட்டு விடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனைத் தடுக்க, தாய்நாட்டில் திருமணம் செய்துக் கொள்ளும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், திருமணத்தை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், மனைவியை கைவிட்டு தலைமறைவாகிய என்ஆர்ஐ.கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி, 70 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மனைவியை கைவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஒப்புதல் அமைப்பு தரப்பில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அவர்களில் 8 பேரது பாஸ்போர்ட் கடந்தாண்டு ஜூலையில் ரத்து செய்யப்பட்டது.