புதுச்சேரி: ஒருங்கிணைந்த எதிரிகளை வீழ்த்த தனித்தனியாக போர்க்களம் அமைக்காமல் ஒரு விரல் புரட்சி வழி சுலபமாக இருக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். புதுவையில் திராவிடர் கழக முன்னோடி சி.மு.சிவத்தின் நூற்றாண்டு மாநாடும் , திராவிடர் கழக மாநாடும் அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, சாதி கொடுமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தம்மை, சுட்டுக் கொன்றால் தான் சாதிக்கொடுமை நீங்கும் என்றால் அந்த மரணத்தை விரும்பி ஏற்க தயார் என தெரிவித்தார். சாதிப் பிரச்னைகள் ஒழியும் எனில், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சுட்டுக்கொல்வதை ஏற்றுக்கொள்வேன் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். சாதியம் ஒழிய அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.