சென்னை: கூட்டணி விவகாரத்தில் தேமுதிக தாமதம் செய்யவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் போதிய அவகாசம் எடுத்துக்கொள்கிறது என கூறினார். தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெல்வதும் முக்கியம் எனவும், நாடு முழுவதும் தாமரையை மலரவைப்பதும் முக்கியம் எனவும் கூறினார். நாளை மறுநாள் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார் எனவும் கூறினார்.