புதுடெல்லி: ‘‘பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை, நான் ஒரு முழுமையான ஆர்எஸ்எஸ் தொண்டன். தேசத்துக்காக உழைப்பது மட்டுமே எனது கடமை’’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மக்களவை ஏப்ரலில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜ.வில் பிரதமர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் நேற்று அளித்த பே்டடியில் கட்கரி இதை மறுத்தார் அவர் கூறியதாவது: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார். நான் ஒரு `பக்கா’ ஆர்எஸ்எஸ் தொண்டன். எனது பணி தேசத்துக்காக உழைப்பது மட்டுமே. மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது.