சென்னை: ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தாயாரை கவனித்து கொள்வதற்காக அரசு மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலின் தாய் நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருப்பதாக கூறப்படுகிறது. அவரை கவனிப்பதற்காக மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணிக்கு செல்லும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்படுவதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தாயை கவனிக்க பணிக்கு செல்லும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக டாக்டர் ரவீந்திரநாத் புகார் தெரிவித்துள்ளார்.