சோரனூர்: சென்னையிலிருந்து மங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. கேரளாவின் சோரனூர் பகுதி அருகே வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இன்று அதிகாலை 6.30 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தால் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலின் இயந்திர பெட்டியின் பின்னால் இருந்த லக்கேஜ்-கம்-பிரேக் பேட்டி மற்றும் பார்சல் பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று ரயில் பாதையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.