சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட லிப்ட் ஆபரேட்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன், வாட்டர் மேன் உள்ளிட்ட பலர், அதே குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமியை பல மாதங்கள் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மகிளா நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தன. தற்போது, இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பேரும் சென்னை மகிளா நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது விசாரணையின் நடுவே வழக்கின் 10வது குற்றவாளியான திருமுல்லைவாயலை சேர்ந்த பாபு (37) என்பவர் மயங்கி விழுந்தார்.