முகிலனை கண்டுபிடிக்க கோரி மனு

மதுரை: சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க கோரி மதுரையில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.திராவிடர் விடுதலை கழக தலைவர் மணி அமுதன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கனி அமுதன் உள்ளிட்டோர் மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் நேற்று புகார் மனு அளித்தனர். மனுவில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன், சென்னையில் கடந்த 15ம் தேதி ஆவணப்படம் படம் ஒன்றை வெளியிட்டார். பின் அவர் இரவு 11 மணிக்கு ரயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் மதுரை வந்து சேரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப்பில் உள்ளது. தற்போது அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: