மும்பை: குடிசைவாழ் இளைஞர்களுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சிக்கிம் அணியும், பெண்கள் பிரிவில் மும்பை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. நாட்டின் குடிசைப்பகுதியில் வசிக்கும் கால்பந்து வீரர்களின் திறனை வெளிக் கொண்டு வரும் வகையில் சோனி நிறுவனம் தேசிய அளவிலான போட்டிகளை நடத்துகிறது. அதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘எஸ்பிஎன் தேசிய ஒருங்கிணைப்பு கோப்பை’ கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது. இப்போது 3வது ஆண்டுக்கான ேபாட்டி பிப். 13 முதல் பிப்.17ம் தேதி வரை மும்பையில் நடைப்பெற்றது. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ்நாடுல ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், பீகார் உட்பட 48 அணிகள் பங்கேற்றன. மேலும் நேபாளம், வங்காள தேசத்தில் இருந்து தலா 2 அணிகளும் பங்கேற்றன.