அரசியல் சில அரசியல் கட்சிகள் வெறுப்பை பரப்புகின்றன: மம்தா கருத்து Feb 21, 2019 கட்சிகள் மம்தா கொல்கத்தா: ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வெறுப்பையும், வதந்தியையும் பரப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேகாலயா கவர்னர் தத்தகட்டா ராய் சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். இதில் ‘காஷ்மீரை புறக்கணியுங்கள். அமர்நாத் யாத்திரை செல்வது, மாநிலத்தில் பொருட்களை வாங்குவது என அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார். கவர்னரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவினர், அமைப்புகள். அரசு பதவிகளில் இருப்பவர்கள் வதந்தியையும், வெறுப்பையும் தனது அபாயகரமான அறிக்கைகள் மூலமாக பரப்புகின்றனர் பத்திரிக்கையாளர்கள் கூட இதற்கு தப்பவில்லை. இது மிகவும் அவமானகாரமான அரசியல். இது தான் தற்போதுள்ள மாசுபட்ட கீழ்தரமான அரசிய லாகும்’ என பதிவிட்டுள்ளார். கடந்த திங்களன்று மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு போருக்கு செல்லுமா என முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பதிலளித்த முதல்வர் மம்தா, “ பதன்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பின் கூட அரசு எதுவும் செய்யவில்லை. பொது தேர்தலை முன்னிட்டு ஹிஸ்டிரியா போன்ற போரை வேண்டுமானால் அரசு உருவாக்கும்” என்றார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார்