அரசியல் தேர்தலில் போட்டியில்லை என டிடிவி சொன்னாலும் ஆச்சரியம் இல்லை: அமைச்சர் உதயகுமார் பேட்டி Feb 21, 2019 உதயகுமார் தேர்தலில் கோவை: ‘‘டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். கோவை மண்டல அதிமுக அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கோவை காளப்பட்டியில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின், அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணி அறிவிப்பு தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வந்த பின்னர் டி.டி.வி தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, டி.டி.வி தினகரனிடம் தேர்தலில் நிற்பதற்கே ஆட்கள் இல்லை என்று தகவல் வருகிறது. தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி இந்த கூட்டணி அமைக்கப்பட்டு, 40 தொகுதியும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். பா.ம.க தலைவர் ராமதாஸ் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார், கொள்கை அளவிலே மக்கள் நலன் சார்ந்து நாணலாக விட்டுக்கொடுத்து இருக்கிறோம் என்று. அதையே நாங்கள் வழிமொழிகிறோம்.இவ்வாறு உதயகுமார் கூறினார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார்