கரூர்: கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசுக்கு ரூ20 ஆயிரம் கோடி நிதி மத்திய அரசு தரவேண்டியது உள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் கேட்டுக்கொண்டே இருந்தோம், பெற முடியவில்லை. வரும் எம்பி தேர்தலுக்குப் பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும். அப்போது, ரூ50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெற முடியும். பாஜவின் நிர்பந்தத்திற்கு பணிந்து கூட்டணி வைத்திருப்பதாகவும், கட்டாய திருமணம் எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதருக்குத்தான் கட்டாய திருமணமா என்பது தெரியும். அவருக்கு இருந்த புரோகிதர் பதவியும் போய்விட்டது. அவரது கருத்தை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.