தஞ்சையில் மது போதையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... போதை ஆசாமிக்கு அடி உதை

தஞ்சை: தஞ்சையில் மது போதையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பள்ளி மாணவியிடம் மது போதையில் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் அவருடைய தந்தை அழைத்து வர சொன்னதாக கூறி சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த மாணவிகள் கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் போதை ஆசாமியை பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்ட போலீசார் அந்த வாலிபரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஒரத்தைநாட்டை அடுத்த நடுவூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காததால் போதை ஆசாமியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: