சென்னை: கூட்டணி கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் நிற்குமாறு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என வைகைச்செல்வன் கூறினார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க அழுத்தம் தருவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன எனவும் கூறினார். அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது ரகசியமான ஒன்று என தெரிவித்தார்.