ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்..... பிப்.,24ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.,24 அன்று துவங்கப்பட உள்ளது. முதல்வர் பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். பிப் 24 துவங்கி பிப்.,28 க்குள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் ரூ.2000 சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது.  கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத்தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள்ளாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக அந்த தொகை செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளதால், அதற்கு முன்னதாக சிறப்பு நிதியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 2 ஆயிரம் ரூபாயை வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சியில் ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: