மக்கள் பணியை சிறப்பாக செய்வேன்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு முதல் நந்தனம் பகுதியில் பொதுமக்கள், கடை வைத்திருப்பவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மலர் தூவி, பொன்னாடை போற்றி, உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திமுகவுக்குதான் எங்கள் வாக்கு, நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், என்று உறுதியளித்தனர். தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நான் இந்த தொகுதியை நன்கு அறிந்தவன். இந்த தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன தேவை என்பதையும் அறிந்தவன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மயிலாப்பூர் தொகுதியில் சிறப்பு மிகுந்த கோயில்கள் அமைந்துள்ளன. எனவே மயிலாப்பூர் பகுதியை சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவேன். சிறந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். மக்கள் பணியை சிறப்பாக செய்வேன். சட்டமன்ற உறுப்பினராக எனது பணியை திறம்பட செய்து, மக்களிடம் நன்மதிப்பை பெறுவேன்,’ என்றார்….

The post மக்கள் பணியை சிறப்பாக செய்வேன்: மயிலை த.வேலு வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: