சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் அளித்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை கடந்த 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 கோடியில் 10.1.2007ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு 1 கோடியை கருணாநிதி வழங்கினார். மீதமுள்ள 4 கோடியிலிருந்து வரும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.4 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாத வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங் கினார். அதன்படி, கே.ராஜாபாதர், என்.கண்ணுச்சாமி, ஆர்.முத்துக்குமார், கோ.வெங்கடேசன், எம்.கிட் டான், த.முருகன், தி.மாசானமுத்து, க.ஞானபிரகாசம் ஆகியோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.