கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் அளித்த ரூ.5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை கடந்த 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு  வருகிறது. ரூ.5 கோடியில் 10.1.2007ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு 1 கோடியை கருணாநிதி வழங்கினார். மீதமுள்ள 4 கோடியிலிருந்து வரும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை  வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.4 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாத வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங் கினார். அதன்படி, கே.ராஜாபாதர், என்.கண்ணுச்சாமி, ஆர்.முத்துக்குமார், கோ.வெங்கடேசன், எம்.கிட் டான், த.முருகன், தி.மாசானமுத்து, க.ஞானபிரகாசம் ஆகியோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: