பிரியங்கா அறிவுரை: தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்

புதுடெல்லி: ‘‘என்னால் அதிசயம் நடந்துவிடும் என எதிர்பார்க்காதீர்கள். பூத் அளவில் உள்ள வலிமையை வைத்துதான் கட்சியின் செயல்பாடு அமையும்’’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  அறிவுரை கூறி உள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்திக்கு, உத்தரப் பிரதேச கிழக்கு பிரிவுக்கான பொறுப்பும் வழங்கப்பட்டது. இப்பிரிவின் கீழ் 19 சட்டப்பேரவை தொகுதிகள், 4 மக்களவை தொகுதிகள் வருகின்றன.  மக்களவை தொகுதிகள் நான்கும் பந்தேல்காந்த் பிராந்தியத்துக்கு உட்பட்டு உள்ளது.

அப்பிராந்தியத்தின் பூத் மட்ட அளவிலான ஆய்வு கூட்டம் பிரியங்கா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்த இக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, ‘‘மேலே இருந்து கொண்டு, எந்த  அதிசயத்தையும் நான் நிகழ்த்திவிட முடியாது. பூத் அளவில் நிர்வாகிகள்தான் கட்சியை வலுப்படுத்த வேண்டும். எனவே உபியில் நம் கட்சியை வலுப்படுத்த உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும். அதே நேரத்தில் கட்சிக்கு  எதிரான நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: